முன்னூறின் தொடுகையிலே…

வசந்தா ஜெகதீசன்

முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்
கவித்தோப்பின் அறுவடையில்
கனிந்ததொரு விளைச்சல்
காத்திடமாய் அரணமைத்து வளர்த்த பயிர் உழவர்
ப.வை அண்ணா தொகுப்பே பாவலர்க்கு அமிர்தம்
பல கவிஞர் பகிரும் கவி வனப்பில்
பக்கதுணை கவிஞர்களின் நெறியாள்கை மிடுக்கில்
ஓயாது ஒங்கிடுமே எழுதுகோலின் ஏணி
வயல்நிலமாய் பாமுகமே தளமாகி தாங்கும்
வாரமது செவ்வாயில் வான் தொட்டே உயரும்
சந்தம் சிந்தும் கவியாளர் பலராகி நாமும்
பாவலராய் சூட்டுகிறோம் பாமாலை வாழ்த்து!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

Continue reading

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading