முன்னூறின் தொடுகையிலே…

வசந்தா ஜெகதீசன்

முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்
கவித்தோப்பின் அறுவடையில்
கனிந்ததொரு விளைச்சல்
காத்திடமாய் அரணமைத்து வளர்த்த பயிர் உழவர்
ப.வை அண்ணா தொகுப்பே பாவலர்க்கு அமிர்தம்
பல கவிஞர் பகிரும் கவி வனப்பில்
பக்கதுணை கவிஞர்களின் நெறியாள்கை மிடுக்கில்
ஓயாது ஒங்கிடுமே எழுதுகோலின் ஏணி
வயல்நிலமாய் பாமுகமே தளமாகி தாங்கும்
வாரமது செவ்வாயில் வான் தொட்டே உயரும்
சந்தம் சிந்தும் கவியாளர் பலராகி நாமும்
பாவலராய் சூட்டுகிறோம் பாமாலை வாழ்த்து!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading