” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

முன்னூறின் தொடுகையிலே…

வசந்தா ஜெகதீசன்

முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்
கவித்தோப்பின் அறுவடையில்
கனிந்ததொரு விளைச்சல்
காத்திடமாய் அரணமைத்து வளர்த்த பயிர் உழவர்
ப.வை அண்ணா தொகுப்பே பாவலர்க்கு அமிர்தம்
பல கவிஞர் பகிரும் கவி வனப்பில்
பக்கதுணை கவிஞர்களின் நெறியாள்கை மிடுக்கில்
ஓயாது ஒங்கிடுமே எழுதுகோலின் ஏணி
வயல்நிலமாய் பாமுகமே தளமாகி தாங்கும்
வாரமது செவ்வாயில் வான் தொட்டே உயரும்
சந்தம் சிந்தும் கவியாளர் பலராகி நாமும்
பாவலராய் சூட்டுகிறோம் பாமாலை வாழ்த்து!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan