கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

பட்டமரத்தில் ஒற்றைக்குருவி-68

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-04-2025

பட்டமரத்தில் ஒற்றைக் குருவியின்
பரிதாபக் கதை கேட்டாயோ..
பாழாய்ப் போன குண்டுமழையால்
பட்டமரமும் விட்டதாயும் அறிவாயோ?

பச்சைக் காய்கறி கனிகளும்
பசுஞ்சோலையும் கண்டாயோ
பள்ளி சிறாரும் வீடுமாய்
பாடி திரிந்த காணியிதுவாய்

காணிக்காரன் என்தாயை
குடும்ப உறவாய் பார்த்தானல்லோ
மாம்பழம் கொத்தி தாய் உண்ண
மகிழ்ந்து ரசித்தானல்லோ

முட்டையில் வெளிவந்த எனக்கு- தாய்
முதல் சொன்ன கதையிதுவல்லோ
முத்தான காணிகாரர் எவரையும் காணீரே
முறையிடக் கேட்க யாருமில்லையே…

போனமாதம் வந்த சின்னப்பையனவன்
பேரதிர்ச்சியாய் பார்த்தான் என்னை
பேரப்பயலாய் இருப்பானோ இவன்
பெரியவரின்ர சாயலும் தெரியுதல்லோ!

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading