முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

துளிர்ப்பாகும் வசந்தம்

நேவிஸ் பிலிப் கவி இல (420)

இலையுதி்ர்ந்த மரம்
மெல்லத் தளிர் துளிர்த்து
பச்சையிலை தோன்று முன்னே
மொட்டுக்கள் முகிழ்ந்து
வசந்தத்தை வரவேற்க
கட்டியங் கூறுது

புள்ளினத்தின் கீச்சொலி
காலை நேர பூபாளமாய்
வண்ணக் கதிரவனும்
மெல்லென எழுந்திட

ஓங்கி உயரும் மரங்கள்
சூழ்ந்து வளரும் செடிகள்
பூத்துக் குலுங்கும் மலர்கள்
வாடிக் கிடந்த பூமித் தாய்க்கு
அழகு சேர்க்குது

வாசமெழும் மலர்களிலே
மதுவுண்ணும் வண்டினம்
மதுர கீதம் பாட
மந்த மாருதம் வீச

இள வேனில் காலமும்
இளந்தென்றல் காற்றோடு
இன்பமாய் இணைந்திட
மீண்டும் ஒரு வசந்த காலம்
இதமாய் துளிர்த்திடுதே,,,,,,,,

வணக்கம

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading