துளிர்ப்பாகும் வசந்தம்

நேவிஸ் பிலிப் கவி இல (420)

இலையுதி்ர்ந்த மரம்
மெல்லத் தளிர் துளிர்த்து
பச்சையிலை தோன்று முன்னே
மொட்டுக்கள் முகிழ்ந்து
வசந்தத்தை வரவேற்க
கட்டியங் கூறுது

புள்ளினத்தின் கீச்சொலி
காலை நேர பூபாளமாய்
வண்ணக் கதிரவனும்
மெல்லென எழுந்திட

ஓங்கி உயரும் மரங்கள்
சூழ்ந்து வளரும் செடிகள்
பூத்துக் குலுங்கும் மலர்கள்
வாடிக் கிடந்த பூமித் தாய்க்கு
அழகு சேர்க்குது

வாசமெழும் மலர்களிலே
மதுவுண்ணும் வண்டினம்
மதுர கீதம் பாட
மந்த மாருதம் வீச

இள வேனில் காலமும்
இளந்தென்றல் காற்றோடு
இன்பமாய் இணைந்திட
மீண்டும் ஒரு வசந்த காலம்
இதமாய் துளிர்த்திடுதே,,,,,,,,

வணக்கம

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading