” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

துளிர்ப்பாகும் வசந்தம்

நேவிஸ் பிலிப் கவி இல (420)

இலையுதி்ர்ந்த மரம்
மெல்லத் தளிர் துளிர்த்து
பச்சையிலை தோன்று முன்னே
மொட்டுக்கள் முகிழ்ந்து
வசந்தத்தை வரவேற்க
கட்டியங் கூறுது

புள்ளினத்தின் கீச்சொலி
காலை நேர பூபாளமாய்
வண்ணக் கதிரவனும்
மெல்லென எழுந்திட

ஓங்கி உயரும் மரங்கள்
சூழ்ந்து வளரும் செடிகள்
பூத்துக் குலுங்கும் மலர்கள்
வாடிக் கிடந்த பூமித் தாய்க்கு
அழகு சேர்க்குது

வாசமெழும் மலர்களிலே
மதுவுண்ணும் வண்டினம்
மதுர கீதம் பாட
மந்த மாருதம் வீச

இள வேனில் காலமும்
இளந்தென்றல் காற்றோடு
இன்பமாய் இணைந்திட
மீண்டும் ஒரு வசந்த காலம்
இதமாய் துளிர்த்திடுதே,,,,,,,,

வணக்கம

Nada Mohan
Author: Nada Mohan