சித்திரையில் இத்தரையில்….

வசந்தா ஜெகதீசன்
செல்வத்தின் தோப்பழகில்
சித்திரையாள் மலர்ச்சி
சிவந்திருக்கும் வான் போல
சிலிர்கின்ற மகிழ்ச்சி
தமிழரின் புத்தாண்டாய் தரணிலே வருகை
தரும் மாற்றம் பலவாகி தொடருகின்ற உவகை
எழில்கோலம் அழகாகும்
எங்குமே பசுமை
உழைக்கும் கர உந்தலே
உலகிற்கு விருந்து
உயர்வு நோக்கி விடியலே வாவென்று அழைப்பு
கடிதெனவே கஸ்ரங்கள்
கரைந்தோடும் காலம்
சித்திரையாள் இத்தரையில்
செழித்திருக்கும் கோலம்
செல்வாக்காய் எங்குமே
சிரிப்பொலிகள் பேசும்
இருளகன்று ஒளிவெள்ளம்
இத்தரையில் பாயும்
விடியலின் அறைகூவல்
வெற்றியென முழங்கும்.

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading