நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சித்திரையில் இத்தரையில்….

வசந்தா ஜெகதீசன்
செல்வத்தின் தோப்பழகில்
சித்திரையாள் மலர்ச்சி
சிவந்திருக்கும் வான் போல
சிலிர்கின்ற மகிழ்ச்சி
தமிழரின் புத்தாண்டாய் தரணிலே வருகை
தரும் மாற்றம் பலவாகி தொடருகின்ற உவகை
எழில்கோலம் அழகாகும்
எங்குமே பசுமை
உழைக்கும் கர உந்தலே
உலகிற்கு விருந்து
உயர்வு நோக்கி விடியலே வாவென்று அழைப்பு
கடிதெனவே கஸ்ரங்கள்
கரைந்தோடும் காலம்
சித்திரையாள் இத்தரையில்
செழித்திருக்கும் கோலம்
செல்வாக்காய் எங்குமே
சிரிப்பொலிகள் பேசும்
இருளகன்று ஒளிவெள்ளம்
இத்தரையில் பாயும்
விடியலின் அறைகூவல்
வெற்றியென முழங்கும்.

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan