அலை.

வசந்தா ஜெகதீசன்
அலை…
அலை அலையாக அணிதிரள் கூட்டம்
அகதியாய் ஒடிய அலைவின் ஏக்கம் அலை மோதியே மீளுமே அன்றைய தேக்கம்
அனுதினம் அலையாய் மோதிடும் பாரம்
அலைந்திட்ட ரணங்களை அம்பென எய்யும்

போரின் அலைகள் புறமிட்ட சரிதம்
போக்கிடமின்றியே புகலிடச் சுவாசம்
அலையென திரண்டோம்
அன்னை மண்விட்டு அவதியில் வீழ்ந்தோம்
அலையது கரை வந்து கடலுக்குள் மீளும்
அலைந்திடும் மனிதமோ அவனியின் அகதி
அலையென மனமோ குமுறிடும் நியதி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading