ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

அலை.

வசந்தா ஜெகதீசன்
அலை…
அலை அலையாக அணிதிரள் கூட்டம்
அகதியாய் ஒடிய அலைவின் ஏக்கம் அலை மோதியே மீளுமே அன்றைய தேக்கம்
அனுதினம் அலையாய் மோதிடும் பாரம்
அலைந்திட்ட ரணங்களை அம்பென எய்யும்

போரின் அலைகள் புறமிட்ட சரிதம்
போக்கிடமின்றியே புகலிடச் சுவாசம்
அலையென திரண்டோம்
அன்னை மண்விட்டு அவதியில் வீழ்ந்தோம்
அலையது கரை வந்து கடலுக்குள் மீளும்
அலைந்திடும் மனிதமோ அவனியின் அகதி
அலையென மனமோ குமுறிடும் நியதி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading