பாசப்பகிர்வினிலே..

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2145!!
பாசப்பகிர்வினிலே..!!

பக்குவமாய் இரு ஐந்து திங்கள்
பகல் இரவாய்க் கண்விழித்து
பாலூட்டித் தாலாட்டி வளர்த்து
ஆளும் அன்னை வடிவே வாழ்க..

ஒன்றல்ல இரண்டல்ல சுமந்து
ஒன்றன் பின் ஒன்றாய் கருத்தரித்து
நோய் என்றும் நோ என்றும் பொறுத்து
வாயை வயிற்றை கட்டி வளர்ப்பாள்…

உண்டி தனைத் தான் விலக்கி
மெண்டு நீரைத்தான் குடித்து
மிச்சம் உள்ள பிள்ளையை வளர்க்கும்
தாய்மைக்கு புகழே தருவோம்..

பாசத்தினைப் பகிர்வதிலே
பேதமை இங்கே காட்டுவதில்லை
மூலையிலே முடங்கினாலும்
முன் வந்து போராட்டம் செய்யாளே..

அன்னை எனும் அற்புதத்தை
அழகு நிறை பெட்டகத்தை
காத்து நிற்கும் பணி நமதே
காலம் எல்லாம் போற்றுவமே..
சிவதர்சனி இராகவன்
8/5/2025

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading