பருவம் 714

செல்வி நித்தியானந்தன்

சித்திரையில் வந்துவிட்ட பருவம்
முத்திரை பதித்திடும் உருவம்
எத்தரை பார்க்கினும் தாயுருவம்
பத்தரை மாதத்து தங்கமாகும்

நாட்டுக்கு நாடு பலமாற்றம்
நானிலமும் பலதும் தடுமாற்றம்
நாலபுறமும் சிதறிய கூட்டம்
நாடியே வந்திடும் நினைவுநாளாம்

பாவக் கணக்குகளை குறைப்பதும்
நற்கணக்கினை பலதாய் அதிகரிப்பதும்
ஆலயங்களில் கஞ்சி ஊற்றுவதும்
அவனியில் அன்னைக்கு நன்றாகுமே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading