இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

உலக குடும்ப தினம்

உலக குடும்ப தினம்

வாழ்வென்ற பூஞ்சோலை வண்ணமாய் மலர
தாழ்வில்லாச் செயல்கள் தலைவிரித்து ஆடணும்
சூழ்கின்ற வையகத்தில் சுந்தர வாழ்வும்
சுடர்கின்ற புவியிலே நிலைத்துத்தான் நிற்கணும்

குடும்பத்தின் வாழ்விலே குதூகலம் வந்திட
கூடியே வாழ்திடல் தேடியே வரணும்
நாடிய உறவுகள் நன்மைகள் ஆற்றியிங்கு
நன்றாய் வாழ்ந்திட குடும்பமே இன்பமாகும்

இன்பத்தின் இதழ்கள் இனிதே மலர்ந்திட
துன்பங்கள் தூர விலக
இறுக அணைப்பும் இதய பரிமாற்றமும்
குறுகாதிருக்க குடும்பம் உயர்ந்திடணும்

உலக குடும்பதினம் உணர்வாய்ப்பற்ற
உறுதியாய் உன் வாழ்வு
பரிதியாய் விரியட்டும்

நகுலா சிவநாதன் 1807

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading