இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

ஒரு வானொலி நேயரின் வாழ்த்தொலி

ஜெயம் தங்கராஜா

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
புதியதை புதுமையை மானிடன் படைத்தான்
வானொலி இல்லாமல் வளர்ச்சியும் இல்லையென
காற்றலை ஊக்கத்தை உண்டுபண்ணும் எல்லையென

புலத்தில் பூத்தது வானொலி ஒன்று
இலண்டன் தமிழ் வானொலி என்று
உண்மையில் நம்மவர்க்கு கிடைத்த பொக்கிஷம்
எண்ணங்களை கவர்ந்திழுத்து வைத்ததுவே தன்வசம்

உருவாக்கவென்று எம்மவரை ஆக்கிக்கொண்டு அன்று
இருபத்தெட்டு ஆண்டுகளை தொட்டுக்கொண்டது இன்று
தொழில் நுட்பங்கள் அறிமுகமாகி முடிவில்
எழிலான தொலைக்காட்சியென பாமுகம் வடிவில்

அயராது உழைத்திட்ட அதிபருக்கு வாழ்த்து
உயர்வான எண்ணங்கொண்ட நோக்கத்தையும் சேர்த்து
முயற்சிக்கும் பயிற்சிக்கும் வித்திட்ட தளமன்றோ
உயர்ந்ததே புலம்பெயர்விலும் நமது மொழிவளமன்றோ

ஜெயம்
12.06.2025

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading