” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஒரு வானொலி நேயரின் வாழ்த்தொலி

ஜெயம் தங்கராஜா

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
புதியதை புதுமையை மானிடன் படைத்தான்
வானொலி இல்லாமல் வளர்ச்சியும் இல்லையென
காற்றலை ஊக்கத்தை உண்டுபண்ணும் எல்லையென

புலத்தில் பூத்தது வானொலி ஒன்று
இலண்டன் தமிழ் வானொலி என்று
உண்மையில் நம்மவர்க்கு கிடைத்த பொக்கிஷம்
எண்ணங்களை கவர்ந்திழுத்து வைத்ததுவே தன்வசம்

உருவாக்கவென்று எம்மவரை ஆக்கிக்கொண்டு அன்று
இருபத்தெட்டு ஆண்டுகளை தொட்டுக்கொண்டது இன்று
தொழில் நுட்பங்கள் அறிமுகமாகி முடிவில்
எழிலான தொலைக்காட்சியென பாமுகம் வடிவில்

அயராது உழைத்திட்ட அதிபருக்கு வாழ்த்து
உயர்வான எண்ணங்கொண்ட நோக்கத்தையும் சேர்த்து
முயற்சிக்கும் பயிற்சிக்கும் வித்திட்ட தளமன்றோ
உயர்ந்ததே புலம்பெயர்விலும் நமது மொழிவளமன்றோ

ஜெயம்
12.06.2025

Nada Mohan
Author: Nada Mohan