நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

கணப்பொழுதில்……..

இரா.விஜயகௌரி
கணப்பொழுதில் விரைந்தெழுந்து
கரைந்தெழுதும். வாழ்வு- இங்கு
வினைப்பயனோ வினைத்திறனோ
அறிவறியாப் பொழுது்

கனத்தெழுதும் வாழ்வின் நொடி
கனவெனவே கலையும் -இங்கு
நிலையில்லா. இவ்வாழ்வினுக்கா-எம்
குழி பறிக்கும் கூட்டம்

ஆய்ந்தறிய முடியாத ஆய்வரங்கு
அழுதேதான் புரண்டாலும் மீளாத
உயிர் வதையின் ரணங்கள்
புரியாமல் ஓடுகின்றோம் புதைகின்றோம்

அழித்தெழுதி அனலெழுதி
சிதைத்தழித்து சீர்குலைத்து
மனம் வதைத்து. குணம் சிதைத்து
ஏன் ஏனின்னுமெங்கள் வாழ்வு

புரியாத மானுடனே இங்கு
நிலையில்லை. வாழ்வு
தினம் மனங்களிலே. வாழ்வு சமை
நிலை கொள்ள. வாழ்வாய்

Nada Mohan
Author: Nada Mohan