இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

தமிழரொரு பொருட்டேயில்லை

ஜெயம் தங்கராஜா

ஒன்பது ஆடி தொண்ணூற்று ஐந்து
என்பதை நினைத்தாலே வெடித்துவிடும் நெஞ்சு
புனித பேதுரு தேவாலயம் நவாலி
மணித்துளிக்குள் முதியவரோடு பிஞ்சுக்களும் பலி

புக்காரா விமானங்களின் இனப்படுகொலை வேட்டையொன்று
பக்காவாக நிறைவேற்றி முடித்தநாள்
இன்று
உயிரை பாதுகாக்க சரணடைந்தோர் ஆலயத்தில்
உயிரைவிட்டு ஆங்காங்கே உடல்சிதறிய கோலத்தில்

உடுத்த உடுப்போடு பயந்தோடியவரும் திரும்பவில்லை
எடுப்பதை எடுத்துக்கொண்டு பதறியோடியவரும் காணவில்லை
வருவார்கள் அவர்களென காத்திருந்த உறவுகளும்
திரும்பாத அவராலே உறங்காத இரவுகளும்

அப்பாவி மக்கள்மேல் பதின்மூன்று குண்டுகள்
தப்பின்மேல்தப்பை செய்திட்ட சிங்கள குண்டர்கள்
மக்களை கொன்று வீசிய காட்சிகள்
பக்கங்கள் ஒவ்வொன்றும் மறக்காத காட்சிகள்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading