” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தமிழரொரு பொருட்டேயில்லை

ஜெயம் தங்கராஜா

ஒன்பது ஆடி தொண்ணூற்று ஐந்து
என்பதை நினைத்தாலே வெடித்துவிடும் நெஞ்சு
புனித பேதுரு தேவாலயம் நவாலி
மணித்துளிக்குள் முதியவரோடு பிஞ்சுக்களும் பலி

புக்காரா விமானங்களின் இனப்படுகொலை வேட்டையொன்று
பக்காவாக நிறைவேற்றி முடித்தநாள்
இன்று
உயிரை பாதுகாக்க சரணடைந்தோர் ஆலயத்தில்
உயிரைவிட்டு ஆங்காங்கே உடல்சிதறிய கோலத்தில்

உடுத்த உடுப்போடு பயந்தோடியவரும் திரும்பவில்லை
எடுப்பதை எடுத்துக்கொண்டு பதறியோடியவரும் காணவில்லை
வருவார்கள் அவர்களென காத்திருந்த உறவுகளும்
திரும்பாத அவராலே உறங்காத இரவுகளும்

அப்பாவி மக்கள்மேல் பதின்மூன்று குண்டுகள்
தப்பின்மேல்தப்பை செய்திட்ட சிங்கள குண்டர்கள்
மக்களை கொன்று வீசிய காட்சிகள்
பக்கங்கள் ஒவ்வொன்றும் மறக்காத காட்சிகள்

Nada Mohan
Author: Nada Mohan