நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

தமிழரொரு பொருட்டேயில்லை

ஜெயம் தங்கராஜா

ஒன்பது ஆடி தொண்ணூற்று ஐந்து
என்பதை நினைத்தாலே வெடித்துவிடும் நெஞ்சு
புனித பேதுரு தேவாலயம் நவாலி
மணித்துளிக்குள் முதியவரோடு பிஞ்சுக்களும் பலி

புக்காரா விமானங்களின் இனப்படுகொலை வேட்டையொன்று
பக்காவாக நிறைவேற்றி முடித்தநாள்
இன்று
உயிரை பாதுகாக்க சரணடைந்தோர் ஆலயத்தில்
உயிரைவிட்டு ஆங்காங்கே உடல்சிதறிய கோலத்தில்

உடுத்த உடுப்போடு பயந்தோடியவரும் திரும்பவில்லை
எடுப்பதை எடுத்துக்கொண்டு பதறியோடியவரும் காணவில்லை
வருவார்கள் அவர்களென காத்திருந்த உறவுகளும்
திரும்பாத அவராலே உறங்காத இரவுகளும்

அப்பாவி மக்கள்மேல் பதின்மூன்று குண்டுகள்
தப்பின்மேல்தப்பை செய்திட்ட சிங்கள குண்டர்கள்
மக்களை கொன்று வீசிய காட்சிகள்
பக்கங்கள் ஒவ்வொன்றும் மறக்காத காட்சிகள்

Nada Mohan
Author: Nada Mohan