ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

நாடொப்பன செய்

நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென மனங்களும் குளிரும் போதினிலே
வில்லென வளையும் மனிதரும் கூடுவார்
சொல்லென நீயும் உபயோகப் படுத்தலிலே
கல்லென இருக்கும் மனமுமோ கரையுமே

நில்லென நிற்க்க வைக்கும் பண்பும்
தெளிந்த வானமாய் தேசமும் மகிழவே
கனிந்தனக் கருணையும் இணையாய் என்றுமே

துணிந்துமே துணைகளும் தூணாகவே சேருமே

பணிந்துமே கடமையும் பயனடைய வேண்டுமே

கணிக்கும் எண்ணத்தில் கருணையும் மிகையாகவே
திணிப்புக்கள் இன்றிய திருந்திடும் போதிலே
நாடொப்பன செய்திடு நாளும் இனிம்யே

சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading