தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நாடொப்பன செய்

நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென மனங்களும் குளிரும் போதினிலே
வில்லென வளையும் மனிதரும் கூடுவார்
சொல்லென நீயும் உபயோகப் படுத்தலிலே
கல்லென இருக்கும் மனமுமோ கரையுமே

நில்லென நிற்க்க வைக்கும் பண்பும்
தெளிந்த வானமாய் தேசமும் மகிழவே
கனிந்தனக் கருணையும் இணையாய் என்றுமே

துணிந்துமே துணைகளும் தூணாகவே சேருமே

பணிந்துமே கடமையும் பயனடைய வேண்டுமே

கணிக்கும் எண்ணத்தில் கருணையும் மிகையாகவே
திணிப்புக்கள் இன்றிய திருந்திடும் போதிலே
நாடொப்பன செய்திடு நாளும் இனிம்யே

சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading