இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

பேரெழில் நாடு

நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு

ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட வளநாடு நீயே

பசுபிக்கடலின் ஓரத்தில்
பார்ப்போர் வியக்கும் வண்ணத்தில்
வீச்சாய் வெப்பம் கொண்டாலும்
மூச்சாய் தென்றல் வரவும்
தழுவும் நாடு யப்பான்தானே!

ஆற்றல் கொண்டநாடாக
அமைதி வண்ண பேரெழிலும்
ஆளுமை மிக்க தொழில்நுட்பமும்
விளங்கும் நாடு
யப்பான் தீவே!!

வளங்கள் உன்னுள் நிறைத்திட்டே
வாஞ்சை வல்லுனர்களை
உருவாக்கி
வளமாய் உறையும் சுந்தரமே
வார்க்கும் சுடராய் வையத்தில்

மூத்தோரை நீயும் மதித்திட்டே
முதுமையைப்போற்றும்
பாரம்பரியம்
என்றும் பெருமை உனக்கேதான்
ஏற்றம் பலவும்
கொண்டாய் வாழ்க !!!

நகுலா சிவநாதன்1818

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading