” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

பேரெழில் நாடு

நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு

ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட வளநாடு நீயே

பசுபிக்கடலின் ஓரத்தில்
பார்ப்போர் வியக்கும் வண்ணத்தில்
வீச்சாய் வெப்பம் கொண்டாலும்
மூச்சாய் தென்றல் வரவும்
தழுவும் நாடு யப்பான்தானே!

ஆற்றல் கொண்டநாடாக
அமைதி வண்ண பேரெழிலும்
ஆளுமை மிக்க தொழில்நுட்பமும்
விளங்கும் நாடு
யப்பான் தீவே!!

வளங்கள் உன்னுள் நிறைத்திட்டே
வாஞ்சை வல்லுனர்களை
உருவாக்கி
வளமாய் உறையும் சுந்தரமே
வார்க்கும் சுடராய் வையத்தில்

மூத்தோரை நீயும் மதித்திட்டே
முதுமையைப்போற்றும்
பாரம்பரியம்
என்றும் பெருமை உனக்கேதான்
ஏற்றம் பலவும்
கொண்டாய் வாழ்க !!!

நகுலா சிவநாதன்1818

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading