மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

தொடு வானம்….

தொடு வானம்…
.விண்ணவன் – குமுழமுனை…
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில
உறவுகளைப் போல்

உன்னுள்ளே விந்தைகளோ
எத்தனை அதை காண
என்னுள்ளே
ஆவல்களோ அத்தனை

நீயோ பெருமுயரத்திலிருந்தபோதிலுமே
எனை போன்றே தனிமையின் இருளிலே வாடுகின்றாயே

நீ உன் சோகங்கள்
மறைத்து பிரகாசமாய்
காட்சிதந்தபோதிலுமே
உன் சோகங்கள் எல்லை
கடந்த தருணந்தனிலே
கர்மேகங்களாகி – உன்
கண்ணீரை பொழிகிறாயே

ஆனால் இந்த மக்களோ
உன் கண்ணீரைக் கண்டு
மகிழ்ச்சியில் திளைக்கிறார்களே
இவர்களை நானோ‌
என்ன சோல்லட்டும்..

சுயநலம் பேணும் – இவ்
உலகில் பிறர் நலம்
பேணுவது நீ மட்டுமே

அதனால் தான்
என்னவோ நீ யாரும்
தொடமுடியா உயரத்திலே
தொடுவானமாய் உள்ளாய் போலும்‌‌‌‌‌….
*~***~*
விண்ணவன் – குமுழமுனை…

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading