” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மூப்பு வந்தாலே…

ரஜனி அன்ரன் (B.A) மூப்பு வந்தாலே… 02.10.2025

வாழ்க்கையின் நியதி வாழ்வியல் தடம்
வரலாற்றின் யதார்த்தம் மூப்பு
காலம் என்றநதி கரைபுரண்டோட
கரைசேரும் படகுதான் மூப்பு
மழலைப் பருவம் நினைவில் மலர
இளமைக் கனவுகள் கதைசொல்ல
முதுமைப் பருவம் முணுமுணுப்போடு நகருமே !

கண்களும் ஒளிமங்கிய தீபமாக
கன்னங்களும் ஒட்டி குழிகளும்விழ
கைகளும் நடுங்க கால்களும் தடுமாற
மூன்றாம் காலும் ஊன்றுகோலாகிட
உடலும் பலத்தை இழக்க உழைத்துக் களைத்தவருக்கு
மூப்பு என்பது ஓய்வுமேடையே !

வாழ்ந்த வாழ்விற்கு சாட்சி
வாழ்வின் வழியில் வந்த அனுபவப்பாடம்
இளமையின் வேகத்தைக் கடந்து
மண்டியிட்டுக் கொள்கிறது முதுமை
முதுமையென்பது யாவர்க்கும் பொதுமை
புதுமையைக் கற்றுத்தரும் ஆசானே முதுமை !