அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

சக்தி

ஜெயம்

சக்தி

அண்டம் அசைக்கும் அதிசயம் சக்தி
மண்மேலே ஆக்கும் மூலமாய் சக்தி
கற்பனைக்கும் எட்டாத ஒன்றாக சக்தி
உற்சாக வாழ்வுக்கு கருவூலம் சக்தி

காரியம் அமைக்கும் உறங்காத சக்தி
வீரியம் பீறிடும் சுரப்பாக சக்தி
தாய்சேய் உறவிங்கே பாசத்தின் சக்தி
தேய்வில்லா காதலும் நேசத்தின் சக்தி

உயர்வாம் மாதர்க்கு படைக்கும் சக்தி
பயத்தை பந்தாடும் வலிமையாம் சக்தி
வளங்களை அளித்திடும் இயற்கையின் சக்தி
நலன்களை தருவதாம் இறைவனின் சக்தி
சக்தியால் கிடைத்ததிந்த உலகமஹா புத்தி
சக்தியின் வடிவங்களாய் எம்மையே சுற்றி
நம்பினால் நடத்திவிடும் பிரபஞ்ச சக்தி
எம்மை வழிநடாதத்துவதே உயிரெனும் சக்தி

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading