பூமி 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
28-10-2025

ஓயாமல் சுழலும் கோளம்
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி உயிர்களின் இருப்பிடம்
கொடுக்கின்றாய் தீரா நல்வளம்!

விதையென விழுந்தால் விருட்சமும்
வீணாகிப் போனால் பசளையும்
பச்சைப் போர்வை போர்த்தி,
பஞ்சமின்றி எம்மைக் காத்து

அடர்ந்த காடெல்லாம் அழகு
அமைதியாய் ஓடும் நதியழகு
வர்ணப் பூக்கள் அழகு
வான்மழை மேகமும் அழகு

நிலக்கரி, தங்கம், நிதிகளென நிலத்தினுள் பல வரங்களென
உயிர்களின் பசியும், உறக்கமும்
உனது இயக்கத்தில் அடக்கமும்

இயற்கை வளத்தை அளிப்பவளே
எதிர்கால சந்ததி சிறப்பதற்கென
வீட்டிற்கு ஒரு மரம் நாட்டி
வீண் அழிவுகளை அகற்றி பூமி காப்போம்.

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading