முதல் ஒலி செவி வழி

வியாழன் கவி-2241

முதல் ஒலி செவி வழி!!

ஐரோப்பாவின் முதல் ஒலி
அழகியல் அதிசயம் ஆளுமை
செவி வழி விதைத்தது
அகவை மூபத்தொடு ஏழானது!!

சூரியக் கதிரென ஒளிர்ந்து
சுடர் பரப்பி நின்றதே
காற்றலை ஊடகமாய்க் காவி
வந்த குரல்கள் எத்தனை..

உயிர்ப்பையும் உணர்வையும்
உலக அரங்கில் புதுமை செய்து
செவி வழி உட்புகுந்தது
சேதி சொல்லிக் கவர்ந்தது!!

உறவுகளை இணைத்த பெருமை
நிறை படைப்பை ஆக்கிய மகிமை
வாழ்த்துமழை பொழிகிறோம்
இன்னும் பலபத்து நிறையவே!!
சிவதர்சனி இராகவன்
13/11/2025

Author:

வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

Continue reading