சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

மாவீரர்கள் மரணம் காண்பதில்லை

ஜெயம்

நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர் விழுந்தது உடலால் மட்டுமே
அவர் வீரமோ வரலாற்றை எட்டுமே

எரிமலைக்கு சமமான பூகம்பத் துளியாய்
குறிபார்த்து தாக்குவதில் பாய்கின்ற புலியாய்
உயிரைக்கூட புன்னகையுடன் அர்ப்பணிப்பார்
உயர்ந்த நோக்கத்துடன் உறுதியாய் பயணிப்பார்

சீவனைவிட உயர்ந்தது தேசத்தின் மண்ணென
காவல் தெய்வங்கள் காத்தாரே கண்ணென
நாம் இருக்கிறோம் வேண்டாமே பயமென
தாம் இருந்தாரே இனத்துக்கு தயவென

மலரொன்றும் அங்கே துப்பாக்கி ஏந்தியது
கலங்காது எதிரியை பலமோடு தாக்கியது
தாய்மண்ணை காப்பாதற்காய் தமைக்கொடுக்கும் ஒப்பந்தம்
மாய்ந்தும் மரணிக்கா மாவீரர் சொந்தம்

Author: