” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-11-2025

ஊமையாய் உறங்கிய
உள்ளத்து அலையெல்லாம்
கார்த்திகை பிறந்தாலே
கனக்கின்றது நினைவாலே

இறுதி மூச்சின் சத்தம்
இடி முழக்கமாய் ஒலிக்கிறது
உதிரம் கொடுத்து நீவிர்
உன்னத வாழ்வு தந்தீர்

உழுது உண்டு வாழும்
செந்தமிழ் ஈழத்திலே
உயிர்க்கொடை
எதுவென உணர்த்தி

உயர்ந்த நோக்கை
உறுதியாய் அர்பணித்த
மாவீரச் செல்வங்களுக்காய்
மண்டியிட்டு

நினைவுகள் கனக்கின்றன
நிம்மதி வெகு விரைவென
செங்காந்தள் மலரெடுத்து
செலுத்துவோம் எம்
அஞ்சலியை—

Jeba Sri
Author: Jeba Sri