நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-11-2025

ஊமையாய் உறங்கிய
உள்ளத்து அலையெல்லாம்
கார்த்திகை பிறந்தாலே
கனக்கின்றது நினைவாலே

இறுதி மூச்சின் சத்தம்
இடி முழக்கமாய் ஒலிக்கிறது
உதிரம் கொடுத்து நீவிர்
உன்னத வாழ்வு தந்தீர்

உழுது உண்டு வாழும்
செந்தமிழ் ஈழத்திலே
உயிர்க்கொடை
எதுவென உணர்த்தி

உயர்ந்த நோக்கை
உறுதியாய் அர்பணித்த
மாவீரச் செல்வங்களுக்காய்
மண்டியிட்டு

நினைவுகள் கனக்கின்றன
நிம்மதி வெகு விரைவென
செங்காந்தள் மலரெடுத்து
செலுத்துவோம் எம்
அஞ்சலியை—

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading