பேரிடர் 94

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025

பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து உறவுகள் பிரிந்து
விம்மி அலறி விழுந்தடித்தோடி

ஆர்ப்பரிக்கும் கடலும் அதிர்வலையும்
ஆங்காங்கு மலைச்சரிவும்
வானம் உடைந்து மழை கொட்ட,
வனமும் பூமியும் ஆத்திரம் காட்ட

கட்டிய கோபுரம் கழண்டு கொட்டி
கதிர்களெல்லாம் கரைந்து போக
விதி என்று சொல்லி விலகிப் போவதா?
வினாக்கள் எழுப்பி விடை தேடுவதா?

நெகிழி குப்பை கடலில் கலந்ததா
இனங்களுக்குள் வந்த மதவெறியா
இயற்கையை அழித்ததால் சீற்றமா??
இயற்கையை நேசித்து இணைந்தே வாழ்வோம்.

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading