பண்படுமோ பண்பாடு 759 23.04.2026

செல்வி நித்தியானந்தன் பண்படுமோ பண்பாடு மண்ணிலே பண்பாட்டால் பலருக்கு வேதனை பகுத்தறிவு தொலைத்து பணமழிக்கும் போதனை பள்ளியில்...

Continue reading

நகைப்பானதோ மனிதம் 1

ஜெயம்
அரவணைப்பை கேட்டு ஏங்குதே ஒரு மனம்
அவசர வாழ்க்கைகைக்குள் சிறைப்பட்டு இன்னொருவர் தினம்
வீதியின் ஓரமாக அழுக்குப் போர்வைக்குள் அவர்
சேதி புரிந்திருந்தும் மெதுவாக பின்வாங்கி இவர்

எந்த மதம் அன்பைத் தடை செய்தது
எந்த கடவுள் இரக்கத்தை இரத்து செய்தது
குழந்தைகளின் மௌன அழுகையில் பஞ்சத்தின் வெளிப்பாடு
வளங்கொண்ட மனிதர்களோ பார்த்தும் பாராத மனத்தோடு

பறவைகள்கூட தன்னலமின்றி தன் கூட்டத்தை காக்கின்றது
சிறப்பான படைப்பாம் மானிடர்க்கோ புத்தியேனோ வேர்க்கின்றது
வாயாலே வடைசுடும் ஏமாற்றுகாரராக பல மனிதர்
பேயான பேய்கூட மனமிரங்கி காட்டிவிடும் மனிதம்

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading