நகைப்பானதோ மனிதம் 1

ஜெயம்
அரவணைப்பை கேட்டு ஏங்குதே ஒரு மனம்
அவசர வாழ்க்கைகைக்குள் சிறைப்பட்டு இன்னொருவர் தினம்
வீதியின் ஓரமாக அழுக்குப் போர்வைக்குள் அவர்
சேதி புரிந்திருந்தும் மெதுவாக பின்வாங்கி இவர்

எந்த மதம் அன்பைத் தடை செய்தது
எந்த கடவுள் இரக்கத்தை இரத்து செய்தது
குழந்தைகளின் மௌன அழுகையில் பஞ்சத்தின் வெளிப்பாடு
வளங்கொண்ட மனிதர்களோ பார்த்தும் பாராத மனத்தோடு

பறவைகள்கூட தன்னலமின்றி தன் கூட்டத்தை காக்கின்றது
சிறப்பான படைப்பாம் மானிடர்க்கோ புத்தியேனோ வேர்க்கின்றது
வாயாலே வடைசுடும் ஏமாற்றுகாரராக பல மனிதர்
பேயான பேய்கூட மனமிரங்கி காட்டிவிடும் மனிதம்

Author:

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading