நகைப்பானதோ மனித நேயம்

நேசமற்ற மனிதர்களின்
நெஞ்சத்துள் சிறையாகி
நியாயமற்ற செயல்களினால்
நகைப்பானதோ மனித நேயம்

அழுகுரலை தனதாக்கி
அகம் நிறைத்து செயல்களாற்றி
தாய்மை கொள் வாஞ்சையுடன்
வாழ்ந்ததெல்லாம் கனவாச்சோ

விதைத்தெழுந்த போர்ச்செடியின்
களைபிடுங்கும் கொலைவெறிகள்
குருதியிலே விருந்து வைக்கும்
கூட்டமிங்கே. தலைமைகளாம்

கன்றிற்காய் உயிர் களைந்தான்
முல்லைக்கே. தேரீந்தான்
கனிவினிலே. வாழ்வு தந்த – எங்கள்
நேசத்தை ஏன் களைந்தோம்

விஷத்தை இங்கு மருந்தென்று
தித்திப்பாய் உண்பதுவோ
நம் இதயத்து அணுக்களெல்லாம்
மனித் நேயத்தை விதைத்தெழுவோம்

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading