சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நகைப்பானதோ மனித நேயம்

நேசமற்ற மனிதர்களின்
நெஞ்சத்துள் சிறையாகி
நியாயமற்ற செயல்களினால்
நகைப்பானதோ மனித நேயம்

அழுகுரலை தனதாக்கி
அகம் நிறைத்து செயல்களாற்றி
தாய்மை கொள் வாஞ்சையுடன்
வாழ்ந்ததெல்லாம் கனவாச்சோ

விதைத்தெழுந்த போர்ச்செடியின்
களைபிடுங்கும் கொலைவெறிகள்
குருதியிலே விருந்து வைக்கும்
கூட்டமிங்கே. தலைமைகளாம்

கன்றிற்காய் உயிர் களைந்தான்
முல்லைக்கே. தேரீந்தான்
கனிவினிலே. வாழ்வு தந்த – எங்கள்
நேசத்தை ஏன் களைந்தோம்

விஷத்தை இங்கு மருந்தென்று
தித்திப்பாய் உண்பதுவோ
நம் இதயத்து அணுக்களெல்லாம்
மனித் நேயத்தை விதைத்தெழுவோம்

Author: