சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கொழுந்தைப் பறித்த கொழுந்து

ராணி சம்பந்தர்

உள்ளம் கொதிக்கிறது
வெள்ளம் சாதிக்கிறது
பள்ளம் சோதிக்கிறததே
அள்ள அள்ளத் தோண்டக்
கண்டு பிடித்த உடலமும்
கண்டு பிடியாத பிணமும்
வதைத்துத் துவைத்ததே

கொழுந்து பறித்து வளர்ந்த
குழந்தைகள் விழுந்து விழுந்து
மெல்ல எழுந்த மலையகத்து
மாந்தரை அதே கொழுந்தில்
கொழுந்தோடு கொழுந்தாய்ப்
பசி மோகம் தீர்க்கப் புதைத்ததே

சூழ்ந்து வந்திடும் செயற்கைக்
கெடுகேடுகளில் அவதியுறும்
இயற்கையோ செய்வதறியாது
அப்பப்ப அலங்கோலமாகவே
கிள்ளியெடுக்கும் கொழுந்துகளில்
அள்ளி எடுக்கும் உயிர்களிலே
தாகந்தீரத் துவைத்துத் துவைத்து
சிதைக்கிறதே .

Author: