சிவதர்சனிஇரா

வியாழன் கவி 2259!!

மனிதம் மறந்தவை..

இருப்பாகிக் கிடந்த
பற்பல பண்புகள்
பறந்தே தான் போயின
பண்பட்ட உலகினில்
புண்பட்ட மனத்தை
புரையோடிப்போன வலியை
ஆற்றிட முடியா ஆங்காங்கு..

வாயில்லா சீவன்களும்
வார்த்தை இல்லா திங்கே
உணர்வினில் ஒன்றித்தே
தந்திடும் பாசமதனை
பட்டொளி வீசி எங்கும்
காண்கிறோம் மறுப்பென்ன
ஏமாற்றமும் ஏமாளித்தனமும்
கண்பட்டுப் போனது மனிதரில்
கற்பூரமாய்ப் பற்றினவே..

வற்றிப் போன வடிகால்
விழியெனும் ஆறு குளம்
ஊரெல்லாம் நீரில் மூழ்க
இதுவே துயருண்ட மனம்
எப்படி இலக்கணம் காண
காண்பதை கடந்து போவதை
காரியம் ஆற்றுவதை
ஏற்றே நகரும் நவீன வாழ்க்கை..
சிவதர்சனி இராகவன்
18/12/2025

Author:

வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

Continue reading