விடுப்பு..!!

விடுப்பு விடுமுறை பயணம் நன்றாய் அமைய வேலைப் பழுவும் கொஞ்சம் அதிகரிக்க ஆலயங்கள்திருவிழா அயலில் கொண்டாட அலுப்பு இன்றியே நானும் நகர்ந்திட உடலும் கொஞ்சம் உற்சாக பெற்றிட தண்ணீர்...

Continue reading

தை தைமாசம்

தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை என்றார்கள்
பாத்திரமின்றி பட்டினியான கதைதான்
உழுதவயல் உக்கிரத்தால் அழிய
பெய்தமழையும் பெருவெள்ளமாய்
பாய
அழுத உழவன் ஆற்றாமை தானடைய
எழுதிய எழுத்தோ எழும்பி நின்று குதித்தது
முடிந்தது ந்த்தார் கொண்டாட்டம்
மூக்கு முட்டக் குடித்து கொண்டாடினர்
நாட்டிலே நிற்கதியானோரை
நினைக்கவேயில்லை
நலன் விரும்பி சேவைசெய்ய
ஒருசிலரே உள்ளனர்
வந்த வெள்ளம் வாரியே சென்றது
நின்ற வெள்ளம் நோயினைக் கொடுத்தது
வீடின்றி வாசலின்றி வெந்த உள்ளங்கள்
வேதனையில் துடித்து வெம்பியே
வெடித்தது
வடிகாலாய் வருகிறது தைமாசம்தான்
வாழ்விலே தந்திடுமாம் வசந்தமும் தான்
சோடிகள் இணைவதும் தைமாசந்தான்
சோடித்து மகிழ்வதும் தையில்தான்

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading