சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன்
ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும்
நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும்
வேற்றகத்தே வாழ்ந்திடினும் வெய்யோன் சேவை ஓன்றாகும்
போற்றி நின்று வணங்குதலே
புவிக்கு நாம் செப்பும் பணிவாகும்

மாடு. மண் , மனிதம், மூன்றிணைந்த கூட்டு
முக்கால வாழ்விற்கும் அச்சாணி கோர்த்து
அசையாது நெய்திடுமே அகிலத்தேர் அமைப்பு

தொடராகும் தொன்மைகளை போற்றுதலும் ஏற்று
புதிதாகும் புதுயுகத்தை ஆக்குதல் ஆற்று
மாற்றத்தின் ஒளிமுதலே ஏற்றத்தின் வித்து
மறுக்காது பலவழியில்
பயணித்தல் கூட்டு
பாரெங்கும் தமிழினத்துப் பெருமைகளை நாட்டு
ஆதியின அடையாளம் ஆணிவேரின் ஆழம்
அகிலமே அணிசேர ஆட்பலத்தைக்கூட்டு! நன்றி
மிக்கநன்றி

Author: