சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

“வேரைத் தாங்கும் விழுதுகள்”

நேவிஸ் பிலிப் கவ இல(554)

விதையில்இருந்து வளரும்
மரத்தின் வேரினைத்தாங்கி
தன் வினைப் பயனை ஆற்றிட
விளைந்து வருவது விழுதகள்

விண் நோக்கிச் செல்லும்
திறமை இருந்தும் தன்னைத்
தாங்கிய மண்ணோக்கிச் செல்லும்
கடமை கொண்ட விழுதுகள்

அகழ்வாரைத் தாங்கும் நிலமாய்
இல்லாது போயினும்
தன்னை உருவாக்கிய
மரத்தைத் தாங்கும் விழுதுகள்

மேலிருந்து கீழ்நோக்கி வரும்
ஆசீர் வாதமென
மரத்திற்கோர் பலமென
விளைந்து வரு்ம் விழுதுகளும்

மரம் சில விழுதுகளை இழந்தாலும்
அப்பணிதனைப் பங்கிட
பலநூறு விழுகள்
பக்க பலமாய்உயிர்த்திடுமே
நன்றி…………

Author: