நிழலாடுதே நினைவாயிரம்2

அந்தக் கடவுளும் உண்மை என்றிருந்தேன்
இந்த இயற்கையை அழகாய் கண்டிருந்தேன்
உன்னைப் பார்த்திட்ட அந்த ஒரு கணத்தில்
இரண்டையும் அழித்தேன் என் மனத்தில்
உண்மையாய் அழகாய் உன்னை உரைத்தேன்

உன் நினைவினை உணவாய் உண்ணுகின்றேன்
உன் அணைப்பை மெய்யென எண்ணுகின்றேன்
உன் அழகுக்கு அடிமை நானானேன்
என் காதலை ஒரு நாள் சொல்லிடுவேன்
என்னன்பே நீ ஏற்றுவிட்டால் உள்ளம் மகிழ்ந்திடுவேன்

ஜெயம் தங்கராஜா
29-01-2026

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading