“தமிழ்”

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222

“தமிழ்”
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர் வாய் மொழி
ஏழு கண்டத்திலும் சேய் மொழி
ஐம்பெரும் காப்பியம் தந்த மொழி!

புலத்து வாழ்வில்
எம் அடையாளம்
தந்த மொழி
தமிழே மொழியே
தாய் மொழியே
உனை வணங்கி
உன் துதி பாடுகின்றோம் ஆடுகின்றோம்!

தேசம் கடந்து வாழ்ந்தாலும் வீசும் காற்றில் கலந்திட்டாய் களிப்புடன் புலம் பெயர் சிறுவர் இளையோர் புலத்திலும் புலமைகள் படைத்திட்டார் !

நன்றி வணக்கம்
15.02.26

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading