பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

போரும் அழிவும்

ரஜனி அன்ரன் (B.A) “போரும் அழிவும்” 05.03.2026

போரும் அழிவும் பாருக்குகேடு
போரும் அழிவும் மரண ஊர்வலம்
வரலாற்றின் நிழலில் வல்லரசின் ஆட்டம்
வளைகுடாப் பகுதியைப் பிரளயமாக்குது
வான்பரப்பினை ஆளில்லாவிண்கலம் ஆக்கிரமிக்குது
நாகரீகம் தழைத்த புண்ணியபூமியில்
சதிகாரக் கும்பலின் அதிகாரவேட்டையில்
குருதியால் எழுதப்படுகிறது நாளையவரலாறு !

பாரசீகத்தின் பழம்பெரும் பெருமையும்
யூதகுலத்தின் மீண்டெழுந்த வலிமையும்
வல்லரசின் தலையீட்டில் மோதிக்கொள்ள
எண்ணைக் கிணறுகளும் பற்றியெரிய
சர்வதேசமும் பதற்றமாகுது சர்வநாசமும் அரங்கேறுதே !

ஏவுகணைகள் வானைப்பிளக்க
எதிர்காலக் கனவுகளும் சிதறிப்போக
அணுவாயுத அச்சத்தில் உலகம்உறைய
அமைதிதேடி அலைகிறதே இதயங்களும்
நாடுகளின் கெளரவப்போரில்
நசுங்கிப்போவது அப்பாவிகளின் உயிர்களே !

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading