மாதரின் மறுபக்கம்

மலராக அவளை வர்ணித்தோர் பலர்
நிலவாக அவளை சித்தரித்தோர் பற்பலர்
மான் விழியாள் தேன் மொழியாள்
அன்னத்தின் நடையென புகழ்ந்தோர் இன்னும் பலர்

இவையெல்லாம் மட்டுமல்ல அவள்
அவள் ஒரு பிரபஞ்சம்
அவள் உயிரை படைக்கும் இறைவி
அவள் வாழ்வை வழங்கும் வள்ளல்

ஆனால் இந்த பூவும் புயலாக மாறும்
இந்த மென்மையும் எரிமலையாய் சீறும்
அநீதியை சந்திக்கும் போதெல்லாம்
அந்த அமைதி பூகம்பத்தை கக்கும்

ஜெயம்
13-03-2026

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading