நன்றி

ராணி சம்பந்தர்

இது இதயத்தின் ஈர்ப்பு
அது உதயத்தின் உயிர்ப்பு
எதுவாயினும் ஒரு செயல்
செய்ததற்கு நன்றி கூறல்
ஆதாயமின்றிய கொடுப்பு

ஆழ் மனதில் உருகி வந்து
சதய உடம்புடன் பருகிப்
பின்னிப் பிணைந்ததே
இணைந்த உண்மையான
தவிப்பின் துடுப்பு

தேள் கொட்டியது போல்
முகம் கடுகடுக்க சும்மா
சாட்டுக்கு உப்புச்சப்பாக
வாயில் மட்டும் வருமே
உச்சரிப்பு பொய்யான
அவிப்பின் நச்சரிப்பு

பிறந்த பாரினில் கறந்த
இரத்த உறவு ,நீர் ,உணவு ,
மருத்துவம் , நண்பர்களும்
இன்னுமின்னும் யாவுமே
கொடையான கொடுப்பனவு

இனிய வாழ்வின் சிறப்புகள்
தந்த இறை பாதந்தொட்டு
மனமாறக் கை கூப்பியே
வாழ்த்துகள் என என்றும்
நன்றி கூறிடுவோமே .

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading