மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

நன்றி

ராணி சம்பந்தர்

இது இதயத்தின் ஈர்ப்பு
அது உதயத்தின் உயிர்ப்பு
எதுவாயினும் ஒரு செயல்
செய்ததற்கு நன்றி கூறல்
ஆதாயமின்றிய கொடுப்பு

ஆழ் மனதில் உருகி வந்து
சதய உடம்புடன் பருகிப்
பின்னிப் பிணைந்ததே
இணைந்த உண்மையான
தவிப்பின் துடுப்பு

தேள் கொட்டியது போல்
முகம் கடுகடுக்க சும்மா
சாட்டுக்கு உப்புச்சப்பாக
வாயில் மட்டும் வருமே
உச்சரிப்பு பொய்யான
அவிப்பின் நச்சரிப்பு

பிறந்த பாரினில் கறந்த
இரத்த உறவு ,நீர் ,உணவு ,
மருத்துவம் , நண்பர்களும்
இன்னுமின்னும் யாவுமே
கொடையான கொடுப்பனவு

இனிய வாழ்வின் சிறப்புகள்
தந்த இறை பாதந்தொட்டு
மனமாறக் கை கூப்பியே
வாழ்த்துகள் என என்றும்
நன்றி கூறிடுவோமே .

Author:

வசந்தா ஜெகதீசன் நன்றி.. மகத்துவமானது மதித்திறன் நிறைந்தது ஆற்றலின் விழிப்பிது உணர்விலே கலந்தது உயர்வாய் மலர்வது செப்பிடும் வார்த்தையில் செம்மை நிறைக்கும் மறவாது வாழ்தலே...

Continue reading