” தேனிசை வேந்தன் “

ரஜனி அன்ரன் (B.A) ” தேனிசை வேந்தன் ” 30.04.2026

தமிழுக்காய் முழங்கிய தேனிசைக்குரல்
தமிழின விடியலுக்காய் கூவியகுரல்
மண்வாசனையோடு புரட்சிக் கானங்களை இசைத்து
ஈழக்கனவை உலகறியச் செய்தகுரல்
ஈழவிடியலுக்கு இசையினைச் சேர்த்தகுரல்
விண்ணுலகம் சென்றதுவே காற்றோடு காற்றாக !

உம்புரட்சி கீதங்களில்
அகதிஇனத்தின் வலியைக் கண்டோம்
மண்ணின் வீரச்செறிவைக் கண்டோம்
மரணபயத்தையே மறக்கவும் கொண்டோம்
எதைச்சொல்ல எதைவிட அத்தனையும் முத்துக்களே !

தேனிசையின் சகாப்தம்ஒன்று மெளனித்தது
விடியல்தீயை மூட்டியஇசை கலந்தது விண்ணோடு
தலைமுறைக்கு தமிழ்ப்பற்றை ஊட்டிய
தேனிசை வேந்தன் நிரந்தர அமைதி கொண்டாலும்
ஈழக்காற்றில் என்றும் இசையாய் கலந்து
தமிழினம் உள்ளவரை உம்தேனிசையும் ஒலிக்குமே !

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading