இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

கனவுப்பயணம்

நகுலா சிவநாதன்
கனவுப்பயணம்

அந்த நொடிப்பொழுது விரைந்த கனவு
இன்னும் நீடிக்காதா? என்றது மனசு
ஆயிரம் நினைவுக்குள் அர்த்தயாம கனவு
அண்டவெளியூடே பரந்து நின்றதோ?

மெல்ல வருடும் செல்லக்கைகள்
சொல்ல வார்த்தை இல்லா நினைவுகள்
அம்மா அம்மா என்ற அகலாத பாசம்
அணைத்தபடி கதைபேசிய அந்தக்கணம்

மகிழ்வின் திவலைகள் கன்னத்தில் முத்தமிட
எத்தனை அன்பு பூரித்துநிற்க
சட்டென விழிகள் திறந்தனவே
பட்டென கனவும் மறைந்ததுவோ?

உணர்வுகள் ஊசலாடின இது கனவா?
காலத்தின் பார்வையில் எல்லாமே மாயம்
அம்மாவைக்கண்ட அந்தக் கனவுப்பயணம்
இன்னமும் மறக்காத நினைவலையாய்?

நகுலா சிவநாதன்1854

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading