கனவுப்பயணம்

நகுலா சிவநாதன்
கனவுப்பயணம்

அந்த நொடிப்பொழுது விரைந்த கனவு
இன்னும் நீடிக்காதா? என்றது மனசு
ஆயிரம் நினைவுக்குள் அர்த்தயாம கனவு
அண்டவெளியூடே பரந்து நின்றதோ?

மெல்ல வருடும் செல்லக்கைகள்
சொல்ல வார்த்தை இல்லா நினைவுகள்
அம்மா அம்மா என்ற அகலாத பாசம்
அணைத்தபடி கதைபேசிய அந்தக்கணம்

மகிழ்வின் திவலைகள் கன்னத்தில் முத்தமிட
எத்தனை அன்பு பூரித்துநிற்க
சட்டென விழிகள் திறந்தனவே
பட்டென கனவும் மறைந்ததுவோ?

உணர்வுகள் ஊசலாடின இது கனவா?
காலத்தின் பார்வையில் எல்லாமே மாயம்
அம்மாவைக்கண்ட அந்தக் கனவுப்பயணம்
இன்னமும் மறக்காத நினைவலையாய்?

நகுலா சிவநாதன்1854

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading