” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கனவுப்பயணம்

நகுலா சிவநாதன்
கனவுப்பயணம்

அந்த நொடிப்பொழுது விரைந்த கனவு
இன்னும் நீடிக்காதா? என்றது மனசு
ஆயிரம் நினைவுக்குள் அர்த்தயாம கனவு
அண்டவெளியூடே பரந்து நின்றதோ?

மெல்ல வருடும் செல்லக்கைகள்
சொல்ல வார்த்தை இல்லா நினைவுகள்
அம்மா அம்மா என்ற அகலாத பாசம்
அணைத்தபடி கதைபேசிய அந்தக்கணம்

மகிழ்வின் திவலைகள் கன்னத்தில் முத்தமிட
எத்தனை அன்பு பூரித்துநிற்க
சட்டென விழிகள் திறந்தனவே
பட்டென கனவும் மறைந்ததுவோ?

உணர்வுகள் ஊசலாடின இது கனவா?
காலத்தின் பார்வையில் எல்லாமே மாயம்
அம்மாவைக்கண்ட அந்தக் கனவுப்பயணம்
இன்னமும் மறக்காத நினைவலையாய்?

நகுலா சிவநாதன்1854

Nada Mohan
Author: Nada Mohan