கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக் கவருகின்ற காட்சி
பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப் பறக்கும் காட்சி
பட்டப்பகலில் வெட்டவெளியில்
சுட்டெரிக்கும் சூரியக்கதிர்கள்
தகதகவென மிருதங்க
வாய்க்காலில் வழிந்தோடும்
நீரில் கால்கள் நனைக்க ஜில்லென்ற குளிரில் தேகம் புல்லரிக்க……..
பயணம் தொடர்கிறது
தேசம் நோக்கி!
காலம் கடந்த பாதையில்
நினைவுகளின் சுவடுகள்
நிஜத்தை வரவழைக்க
நிழலாய் மனத்தில் ஊஞ்சலாடும்
வண்ணக் கனவுகள்…….
ஒரே கூட்டில்….
ஒரே விறாந்தையில்….
ஒரே சமையல்……
ஒரே கும்மாளம்…..
மறைந்துபோன உறவுகள் மனத்தினை நிறைக்க
விழிகள் மறுத்தன தூக்கத்தை
பயணிக்கின்றேன் நான் தொலைதூரம்!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு நன்றி.
திரு.திருமதி. நடா மோகனுக்கு நன்றி.
அனைத்துக் கவிப் படைப்பாளர்கட்கும் பாராட்டுகள்!

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading