” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அப்பாவின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி 108

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026

தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் வெள்ளமாய் பாசமும்
உலா வருவீர்கள் எம்முடன் நேசமாய்..

சொல்ல வார்த்தையில்லா பேரொளிப் பிழம்பே
சோதியாய் ஒளிரும் சுடரும் தானே அப்பா..
தருணமறிந்து தர்க்கம் விலக்கி
அருளும் அறிவும் நிறைந்த ஆளுமையும்

அன்னைக்கு நிகரான அன்பின் பெருமை
கண்ணுக்குள் இன்னும் தெரியுதப்பா..
கலங்கி நாமும் தவிக்கின்றோம் தந்தையரே
கண்மணியாய் எமைக்காத்த தாயுமானவரே…

ஆண்டு எட்டு ஓடி மறைந்தாலும்
ஆறாது எம் துயரம் அப்பா…
மீண்டு வராதோ உங்கள் பாசமென
மீளாத் துயரில் தவிக்கின்றோம் அப்பா…

ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி

Jeba Sri
Author: Jeba Sri