சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

“பதியமிடும் எழுத்தாணிகள்”

நேவிஸ் பிலிப் கவி இல(614)

அன்று முற்றத்து மண்ணிலே
கை விரலால் பதியமிட்டு தமிழ்
பற்றுள்ள எண்ணத்தால்
பயிர் வளர்த்து

முத்தான எழுத்துக்களால்
சேமித்த சொத்துக்கள்
அத்தனையும் இன்று
பரிணாம வளர்ச்சி பெற்ற
அழியாத செல்வங்களாய்

மனங்கள் மகிழ தமிழ் மண் மகிழ
எழுத்தாளர் மாதமிது
ஆண்டுகள் பத்தொன்பதை
தொட்டு வி்ட்ட பெருமிதங்கள்
எட்டுத் திக்கும் எதிரொலிக்க

பாமுகப் பந்தலிலே
பாடி வரும் பறவைகளாய்
நெஞ்சத்து எண்ணங்களை
எழுத்தாணியால் பதியமிட்டு

பொறித்து வைக்கும் சிறார்களும்
முதிர்ச்சி பெற்ற மூத்தோருமாய்
வாழ்த்துகி்றோம் கூடி யொன்றாய்
நன்றியென்ற சொல்லெடுத்து,,,,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan