பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

“பதியமிடும் எழுத்தாணிகள்”

நேவிஸ் பிலிப் கவி இல(614)

அன்று முற்றத்து மண்ணிலே
கை விரலால் பதியமிட்டு தமிழ்
பற்றுள்ள எண்ணத்தால்
பயிர் வளர்த்து

முத்தான எழுத்துக்களால்
சேமித்த சொத்துக்கள்
அத்தனையும் இன்று
பரிணாம வளர்ச்சி பெற்ற
அழியாத செல்வங்களாய்

மனங்கள் மகிழ தமிழ் மண் மகிழ
எழுத்தாளர் மாதமிது
ஆண்டுகள் பத்தொன்பதை
தொட்டு வி்ட்ட பெருமிதங்கள்
எட்டுத் திக்கும் எதிரொலிக்க

பாமுகப் பந்தலிலே
பாடி வரும் பறவைகளாய்
நெஞ்சத்து எண்ணங்களை
எழுத்தாணியால் பதியமிட்டு

பொறித்து வைக்கும் சிறார்களும்
முதிர்ச்சி பெற்ற மூத்தோருமாய்
வாழ்த்துகி்றோம் கூடி யொன்றாய்
நன்றியென்ற சொல்லெடுத்து,,,,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan