நிழல் தேடும் வேளை

வியாழன் கவி 2361

நிழல் தேடும் வேளை..

நிறைவாய் வெம்மை
நமைச் சூழும் வேளை
நிழல் தேடும் மனிதம்
தழழில் சிக்கி தவிக்கும்..

கோடை காலம் வந்து
கொழுத்தும் தீ பிழம்பு
உழலும் தினமும்மேனி
தணலில் இட்ட புழுவாய்..

புழுங்கித் தவிக்கும் போது
புயலோடு இடி மின்னல்
புரட்டிப் போட்ட மரங்கள்
நிலை தடுமாறி வீழ்ந்ததே..

மரத்தை நாட்டி வைக்க
மழை வளத்தைப் பெருக்க
தணியும் வெம்மை மெல்ல
தடுப்போம் வரட்சி மண்ணில்..
சிவதர்சனி இரா
2/7/2026

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading