“நிழல் தேடும் வேளை”

நேவிஸ் பிலிப். கவி இல(628)

கொழுத்தும் வெயிலிலே
நிழலுக்காய் எங்கே போவோம்
மரத்தை வெட்டி பசுமை அழித்தோம்
சோலை நிலங்களை பாலை வனமாக்கி

மானிடா் யாவரும்
நிழல் வேண்டியே ஏங்க
மர நிழல் போலவே சில
மனிதர்களின் நிழலும் அழகாய்

மேகங்களின் நிழல் போல
மனிதரின் நிழலும் கலைந்து போக
சிலரின் நிழல் கறையென படிய
மனமும் கோரமாய் கொதிக்க

சிலரது நிழல் இதமாய்
பலரது நிழல் இறுக்கமாய்
வெட்டிய மரம் துளிர்த்து நிழல் தரும்
மனமோ போலி நிழல் காட்டிடும்

வெட்டாதே மரத்தை
வெட்டும் நிலை ஏற்படின்
நட்டு விடு புதிதாய்
வெட்டு முன்னே
நன்றி ,,,,,,,,,,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading