நிழல் தேடும் வேளை….

வசந்தா ஜெகதீசன்
நிழல் தேடும் வேளை…
உருகியே வீழ்கின்ற மெழுகினைப் போல
உடலங்கள் வாடுது வெப்பத்தின் தாக்கம்
நீச்சலில் தாக்கங்கள் எங்குமே கூட்டம்
வெப்பத்தின் தாக்கத்தில் உயிர்களின் இழப்பு
காலத்தின் கணதியில் பயிரின வரட்சி
மழையின்றி பாறையாய் புவிநிலம் காயுது
வீட்டுக் வீடு விசிறியே சுழற்றுது
வெளியிலே சென்றிட அஞ்சுதே மனது
அனலாய் எரியுது ஆதவன் வெப்பம்
ஐரோப்பா எங்குமே முப்பது டிகிரியாய் உச்சம்
நிழல் தேடும் வேளையாய் ஓடுது மனிதம்
நிறைந்த நீரினை அருந்தலே
வெப்பத்தின் தணிப்பு.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading