நிழல் தேடும் வேளை

தவக்குமார்

ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு வரவு நம் பாதைகளில்
நிறையும்

உச்சி முதல் புழுதி தொடும்
பாதம் வரை கொதிக்கின்ற குருதி
நிழல் கண்ட வேளை
அறு சுவையை மிஞ்சும்
விருந்தாக மாறும்

தாய் மண்ணை துறந்து
சுற்றங்கள் துலைத்து
நகர்வு காணும் வாழ்வில்
நாம் தேடும் நிழலாய் நம்
உறவுகளும் தொடர்ந்தால்
நலமான வாழ்வு நம்மோடு இணையும்!!!

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading