22
Jul
மாறியதே வாழ்வு…
வசந்தா ஜெகதீசன்
மாறியதே வாழ்வு...
தினம் தினமாய் திசைமாறும்
திருப்பங்கள் பலவாகும்
ஆறெனும் நதியோட்டம்
அனுதினமும் பெருமன்றம்
கூறுபடும் குழப்பங்கள்
குறுகி வரும்...
ராணி சம்பந்தர்
எழுத்துக்களை எழுதிடப் பேனா
எத்தனித்து ஏங்குகிறது
எழுத முடியாமல் கைகள் ஏனோ
நழுவி வீங்குகிறது
நாட்டில் நடக்கும் நடப்புகளோ
கோட்டில் ஏறி இறங்குகிறது
கூட்டில் அடைபட்டும் படாமலும்
பெரும் புள்ளிகள் காட்டிக்
கொடுப்பவரைச் சுட்டிப்
பொசுக்கிறது
அப்பா ,பிள்ளை ,சகோதரர் ,
கூட்டாளிகள் கூடிச் சேர்ந்த
தலைகளின் மர்மம் நசுங்கிப்
பதுங்குகிறது
கண்ணில் ஒத்திச் சேர்த்தது
தாய் மண்ணில் நீதியுடனே
தொங்குமா அல்லது இதுவும்
கண் துடைப்பாயிடுமா ?
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.